புதன், 14 ஜூலை, 2010

Pookal pookum tharunam lyrics in Tamil - Madrasapattinam

ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண் நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?????????
ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
ஆண்: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை, பாவை பார்வை மொழி பேசுமே!
பெண்: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை, இன்று இந்த நொடி போதுமே!
ஆண்: வேரின்றி விதையின்றி வின்தூவும் மழையென்று இது என்ன இவன் தோட்டம் பூக்குதே?
பெண்: வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?
ஆண்: இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம், அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்..
ஆண்: முந்தளிரே……
பெண்:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?
ஆண்: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்த எங்கும் ஈர மழை தூவுதே!
பெண்: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!
ஆண்: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
பெண்: ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
ஆண்: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
ஆண்/பெண்:  இது எதுவோ!
பெண்:  பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண்: நேற்றுவரை நேரம்  போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…என்ன  புதுமை?
பெண்/ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
ஆண்: இது எதுவோ!!

20 கருத்துகள்:

  1. இந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல்..எனக்கே எழுதியது போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. kadhal varihalil sirantha varihalaiyum sirantha isaiyum konda paadal

    பதிலளிநீக்கு
  5. நான் கேட்டுப்பாடுணா முதல் பாட்டு

    📝🎤🎸

    பதிலளிநீக்கு
  6. இதற்கு முழு பாடலுக்கு அர்தம் வெளியிடுங்கள்

    பதிலளிநீக்கு