புதன், 14 ஜூலை, 2010

Pookal pookum tharunam lyrics in Tamil - Madrasapattinam

ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண் நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?????????
ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
ஆண்: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை, பாவை பார்வை மொழி பேசுமே!
பெண்: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை, இன்று இந்த நொடி போதுமே!
ஆண்: வேரின்றி விதையின்றி வின்தூவும் மழையென்று இது என்ன இவன் தோட்டம் பூக்குதே?
பெண்: வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?
ஆண்: இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம், அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்..
ஆண்: முந்தளிரே……
பெண்:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?
ஆண்: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்த எங்கும் ஈர மழை தூவுதே!
பெண்: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!
ஆண்: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
பெண்: ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
ஆண்: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
ஆண்/பெண்:  இது எதுவோ!
பெண்:  பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
ஆண்: நேற்றுவரை நேரம்  போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…என்ன  புதுமை?
பெண்/ஆண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
ஆண்: இது எதுவோ!!